வியாழன், 20 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :521

திருக்குறள் – சிறப்புரை :521
சுற்றம் தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. ---
 ஒருவன், வாழ்ந்து கெட்டு வறுமையுற்ற நிலையிலும் அவன் வளமாக வாழ்ந்த காலத்துக் கொண்ட பழைய உறவை மனதில் கொண்டு அவனைப் பாராட்டி மகிழும் பண்பு, சுற்றத்தாரிடம் உண்டு.
“ சுட்டு அறிப பொன்னின் நலம் காண்பார்
  கெட்டு அறிப கேளிரான் ஆய பயன். – நான்மணிக்கடிகை.
பொன்னின் தரம் அறிய, அதனை உருக்கி அறிவார்கள் ; உறவினரால் உண்டாகும் பயனைத் தம்முடைய செல்வம் எல்லாம் அழிந்து வறுமையுற்ற போதுதான் அறிவார்கள்.


1 கருத்து:

  1. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.

    பதிலளிநீக்கு