சனி, 29 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :530

திருக்குறள் – சிறப்புரை :530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல். --- 0
வேந்தன்,  தன்னிடமிருந்து பிரிந்துவென்ற ஒருவன் மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்தானாகில், அவன் பிரிந்து சென்றதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்து அவனைச் சுற்றமாகக் கொள்ளல் வேண்டும்.
“ பிழைத்த பொறுத்தல் பெருமை, சிறுமை
 இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்.” சிறுபஞ்சமூலம்.

பிறர் செய்த தவறுகளைப் பொறுத்தல் பெருமை ; பிறர் செய்த தீமைகளை எண்ணிக் கொண்டிருத்தல் சிறுமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக