ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :510

திருக்குறள் – சிறப்புரை :510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். --- ௧0
 ஒருவனை ஆராய்ந்து பார்க்காமல் தேர்ந்தெடுத்தலும் தேர்ந்தெடுத்தபின் அவன்மீது ஐயம் கொள்ளுதலும்  நீங்காத் துன்பத்தைத் தரும்.
:” ……………………….. பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே” --- நற்றிணை.

அறிவுடையோர், ஆராய்ந்து பார்த்தே நட்புக் கொள்வர் ; நட்புக்கொண்டபின்பு ஆராய்ந்து பாரார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக