செவ்வாய், 11 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :512

திருக்குறள் – சிறப்புரை :512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. --- ௧௨
பொருள் உற்பத்திக்கான இடையூறுகளை ஆராய்ந்து  நீக்கி, நாட்டின்  பொருள் வருவாயைப் பெருக்க வல்லவனே வினை செய்தற்கு உரியவனாவான்.
“ செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ” --கலித்தொகை.

அறவழியிலிருந்து மாறுபட்டுப் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாகி அழிவைத்தரும் என்ற உண்மையை அறிய மாட்டாயா..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக