வெள்ளி, 14 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :515

திருக்குறள் – சிறப்புரை :515
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
 சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.. ---
ஒரு செயலின் தன்மையும் அதனைச் செய்து முடிப்பதற்குரிய வழி முறைகளையும் ஆராய்ந்து அறிந்து  செய்து முடிக்கும் வல்லமையுடையவனைத் தவிர வேறு ஒருவன் சிறந்தவன் என்று கருதி கட்டளையிடக் கூடாது.
“ சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப” -- முதுமொழிக் காஞ்சி.

முயற்சியின் வலிமை முடிக்கும் செயலால் அறியப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக