செவ்வாய், 18 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :519

திருக்குறள் – சிறப்புரை :519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு. ----
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு செயலைச் செய்து முடிக்க,  பெரும் முயற்சியுடன் கடுமையாக உழைக்கும் ஒருவனை,  வினை ஏவியவன் தவறாக நினப்பானாகில், அவன் தேடிய செல்வம் அவனை விட்டு நீங்கும்.
“ கேளிர்கள் நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியேபோல் தமியவே தேயுமால்.” – கலித்தொகை.

உறவினர்கள் மனம் வருந்தும்படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள், பேணும் முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள்போலத் தாமாகவே தேய்ந்து அழியும்.

1 கருத்து: