புதன், 12 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :513

திருக்குறள் – சிறப்புரை :513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. ----
அன்பு, அறிவு, துணிவு, ஆசையின்மை ஆகிய இந்நான்கு தூய குணங்களையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவனையே செயலாற்ற வல்லவனாகத் தெளிய வேண்டும்.
“ கற்றாங்கு அறிந்து அடங்கி தீதுஒரீஇ நன்று ஆற்றி
பெற்றது கொண்டு மனம் திருத்தி பற்றுவதே
பற்றுவதே பற்றி பணியற நின்று ஒன்று உணர்ந்து
நிற்பாரே நீள்நெறிச் சென்றார். – நன்னெறி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக