வியாழன், 1 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :556

திருக்குறள் – சிறப்புரை :556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. ~~~ ௫௫
மன்னர்க்கு நிலைத்த புகழைத் தருவது மக்களுக்கு நல்லாட்சி நல்கும் செங்கோலே ; செங்கோல் கொடுங்கோலானால் மன்னர்க்கு  வாழுங்காலத்தேயும்  புகழ் இல்லையாம்.
“ மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
 தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே” ~~ புறநானூறு.
நிலையில்லாத இவ்வுலகத்தில் நிலைபெற விரும்பியோர் . தம் புகழை நிலைநிறுத்தித் தாம் மாய்ந்தனரே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக