செவ்வாய், 27 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :576
மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்து கண்ணோடா தவர். ---- ௭௬
கண்ணிருந்தும் அருளொடு பொருந்திய பார்வை அற்றவர்கள் மண்ணொடு பொருந்திய மரத்திற்கு ஒப்பாவர்.
“ அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
  மக்கட்பண்பு இல்லா தவர்.--- குறள். 9997.

அரத்தைப் போலும் கூர்மையான அறிவுடையரே ஆயினும்  ஆறறிவு உடைய மக்களுக்குரிய பண்பு இல்லாதவர்  ஓரறிவு உடைய மரத்திற்கு ஒப்பாவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக