வெள்ளி, 23 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :572

திருக்குறள் – சிறப்புரை :572
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. --- ௭௨
மக்கள் வாழ்க்கைமுறையே கண்ணோட்டத்தில்தான் அமைந்துள்ளது ; கண்ணோட்டம் இல்லாதார் உண்மையில் இந்த நிலத்திற்குப் பெரும் சுமையே.
“ தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறம் செய்க.” –பழமொழி.

அரிதாகிய மக்கள் பிறப்பைப் பெற்றதனால், இயன்றவரை அறம் செய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக