ஞாயிறு, 25 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். ---- ௭௪
துன்புறும் ஒருவரைப் பார்த்த அளவில் அவரின் தேவை அறிந்து, கருணையோடு உதவி செய்யாதவர் முகத்தில் கண்கள் இருந்து என்ன பயன்..? ஒரு பயனும் இல்லை என்பதாம்.
“ இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லது வெஃகி வினை செய்வார்.” – பரிபாடல்.
இரப்போருடைய வறுமையை அவர்தம் மெய்ப்பாடு கண்டு உணர்ந்து, அவர் வாய் திறந்து கேட்பதற்குமுன் ஈதலைச் செய்வார் சான்றோர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக