புதன், 14 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :567

திருக்குறள் – சிறப்புரை :567
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். --- ௬௭
கடுமொழி உரைத்தலும் குற்றத்தின் தன்மை ஆராயாது அளவுக்கு அதிகமாகத் தண்டனை அளித்தலும் ஆகியன அரசன் பகைவரை  வெல்வதற்குரிய (இரும்பினை ஒத்த) வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும்.
” உற்ற பொலிசை கருதி அறன் ஒரூஉம்
 ஒற்கம் இலாமை இனிது.” …… இனியவை நாற்பது.

பேராசைகொண்டு அறவழியிலிருந்து நீங்குதற்கு ஏதுவாகிய மனத் தளர்ச்சி இல்லாதிருத்தல் இனிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக