திங்கள், 26 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். ----- ௭௫
கண்ணுக்கு அழகு ஒளி, (பார்வை) அந்த ஒளிக்கு அணிகலனாக அமைவது கருணையே, கருணை இல்லாக் கண் முகத்தில் அமைந்த புண் என்றே உணரப்படும்.
” குளத்துக்கு அணிஎன்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணிஎன்ப நாணம் தனக்கு அணியாம்
தான்செல் உலகத்து அறம்.” – நான்மணிக்கடிகை.

குளத்துக்கு அழகு தாமரை ; பெண்மைக்கு அழகு நாணம் ; ஒருவன், மறுமைக்கு ஆற்றும் அறங்கள் அவன் ஆண்மைக்கு அழகாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக