புதன், 7 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :560

திருக்குறள் – சிறப்புரை :560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். ---- 0
மன்னன், மக்களைக் காக்கத் தவறினான் எனின் நாட்டில் பசுக்கள் பால்தரா, ஆறுவகைப்பட்ட தொழில்களைச் செய்வோர் தாம் கற்றவற்றை மறந்துவிடுவர். (வேறு தொழில் நாடிச் செல்வர்.)
“ பெரிய ஓதினும் சிறிய உணராப்
 பீடுஇன்று பெருகிய திருவின்
  பாடுஇல் மன்னரைப் பாடன்மாரே.” – புறநானூறு.

பலவாறு எடுத்துக் கூறினாலும் சிறிதளவாயினும் உணரும் அறிவில்லாத, பெருஞ் செல்வத்தைப் பெற்றுள்ள, பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பாராக.

1 கருத்து: