வியாழன், 8 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :561

திருக்குறள் – சிறப்புரை :561
வெருவந்த செய்யாமை
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. ---- ௬௧
 குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து அத்தகைய குற்றத்தை மீண்டும் செய்யா வண்ணம் குற்றத்திற்குத் தகுந்த தண்டனையை அளிப்பவனே அரசனாவான்.
” முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்.” – கலித்தொகை.

முறை எனப்படுவது குற்றம் புரிந்தார் எவராயினும் இரக்கம் காட்டாது, குற்றத்திற்கேற்ப உயிரைப் பறித்தலும் குற்றமாகாது.

1 கருத்து: