திங்கள், 12 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :565

திருக்குறள் – சிறப்புரை :565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து. ----
காட்சிக்கு எளியனாக இல்லாதவனாகவும் கருணையற்ற கொடுமுகம் கொண்டவனாகவும் விளங்கும் அரசன் பெருஞ் செல்வம் உடையவனாயினும்  அவனைப் பார்ப்பது ஒரு பேயைப் பார்ப்பதைப் போன்றதாம்.
“ நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்… --- அகநானூறு.
ஒருவருக்கும் பயனின்றி வறிதே இறத்தலின்றிப் பிறர் பயன் கொள்ளுமாறு தம் பொருளை விடுத்து இறந்தோர், நல்வினை செய்தோராவர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக