சனி, 17 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். ---- ௬௯
 போர் வந்துற்றபோது பாதுகாப்பு அரண்களை அமைக்கத் தவறிய மன்னன், போர் முகங்காண அச்சமுற்று அடங்கி விரைந்து அழிவான்.
“ வாழாமையின் வழிதவக் கெட்டுப்
 பாழாயின நின் பகைவர் தேஎம்” – மதுரைக்காஞ்சி.

வேந்தே,,! நின்னுடைய ஏவலைக் கேட்டுப் பணி செய்து வாழாது நிலைகெட்டுப் பகைத்தமையால் அவர்தம் நாடுகள் பாழாயின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக