சனி, 10 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :563

திருக்குறள் – சிறப்புரை :563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். --- ௬௩
மக்களைத் துன்புறுத்திக் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அரசனாயின் அவன் விரைந்து அழிவான்.
” குடி அலைத்து இரந்து வெங்கோலொடு நின்ற
 முடியுடை இறைவரும் மூர்க்கனும் பதரே.”

குடிமக்களை வருத்தும் கொடுங்கோல் அரசனும் மூடனும் நன்னிலத்தில் விளைந்த பதர் போல்வர்.

1 கருத்து: