புதன், 2 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை :609

திருக்குறள் – சிறப்புரை :609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும். ---- ௬0௯
குடும்பம் நடத்தத் தெரியாதவன் என்னும் குற்றம் சுமந்த ஒருவன் தன் சோம்பலை முயற்சி என்னும்  ஆளுமையால் மாற்ற (ஒழிக்க) அக் குற்றம் நீங்கிவிடும்.
” சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது
 மேவல் எளிது அரிது மெய் போற்றல்….. “ ---- ஏலாதி.

உயிர்விடுதல் எளிது ; மேலான கல்வி கேள்விகளால் நிறைந்து ஒழுகுதல் அரிது. மனை வாழ்க்கை ஏற்றல் எளிது ; அதன்கண் ஒழுக்கத்தைக் காத்தல் அரிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக