ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 627

திருக்குறள் – சிறப்புரை : 627
இலக்கம்  உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.---- ௬௨௭
உடம்பானது துன்பத்திற்கு இலக்காவது இயற்கை என்பதறிந்த சான்றோர்கள், .தமக்குத் துன்பம் நேர்ந்தவிடத்து மனம் கலங்க மாட்டார்கள்
“ எய்தாத வேண்டார் இரங்கார் இகழ்ந்ததற்குக்
 கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சி யவர்.”--- ஆசாரக்கோவை.

உண்மைகளை உணர்ந்த அறிவுடையார், கிடைத்தற்கு அரியவற்றை விரும்பார்; இழந்ததற்கு வருந்தார் ; தீராத துன்பம் நேர்ந்தவிடத்து மனம் கலங்கார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக