வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 618

திருக்குறள் – சிறப்புரை : 618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. --- ௬௧௮
கடமைகளை ஆற்ற முயன்றும் காலம் கைகூடாமல் போவது யார்க்கும் பழியன்று ; ஆற்றவேண்டியதை அறிந்திருந்தும் முயற்சி மேற்கொள்ளாது காலம் கடத்தலே பழியாகும்.
“ சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.” –முதுமொழிக்காஞ்சி.
முயற்சியின் வலிமை , முடிக்கும் செயலால் அறியப்படும்.


1 கருத்து: