செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 629

திருக்குறள் – சிறப்புரை : 629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பதுள்
துன்பம் உறுதல் இலன். ---- ௬௨௯
 இன்பமானவற்றை எண்ணி இன்பம் கொள்ளாதவன் துன்பம் வந்துற்றபோது  துயரம் கொள்ளான். வாழ்வில் இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு  பக்கங்கள் போன்றவையே.
” இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
 நன்பகல் அமையமும் இரவும் போல
 வேறு வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து
 உள என உணர்ந்தனை ஆயின்…” – அகநானூறு.
 நெஞ்சே….!  இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் நல்ல பகல் பொழுதும் இராப் பொழுதும் போல, வேறு வேறு இயல்பு உடையனவாகி மாறுபட்டு எதிர் நிற்பன என்பதை அறிந்து கொண்டாய் – தலைவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக