திங்கள், 28 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 635

திருக்குறள் – சிறப்புரை : 635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. ----- ௬௩௫
 அறநெறிகளை ஆராய்ந்து அறிந்தவனாய், ஆழ்ந்த புலமை சான்ற சொற்களைக் கூறுவானாய், எக்காலத்திலும் செயலாற்றும் திறன் உடையவனாய் விளங்கும் ஒருவனே அரசனுக்குத் துணையாகும் தகுதியுடையவனாவான்.
” கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி.” –கலித்தொகை.

தலைவ..! நீ, தமக்கு வருகின்ற இறப்பையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாதார் வழியிலே செல்லாமல், அவ்வழியிலிருந்து மாறுபட்ட நல்லவர் வழியை உனக்கு வழியாகக் கொள்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக