வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 625

திருக்குறள் – சிறப்புரை : 625
 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
 இடுக்கண் இடுக்கண் படும். ---- ௬௨௫
ஒன்றன் பின் ஒன்றாகத் துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் அவற்றை மனம் தளராது எதிர்த்து நிற்பவனிடத்துத் துன்பங்கள் துன்பப்பட்டுப் போகும்.
“ நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார் …” --- பழமொழி.

செய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எதுவந்தாலும் அஞ்ச மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக