வியாழன், 24 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 631

64. அமைச்சு
திருக்குறள் – சிறப்புரை : 631
 கருவியும் காலமும் செய்கையும்
அருவினையும் மாண்டது அமைச்சு. --- ௬௩0
ஓர் அரிய வினையைச் செய்து முடிப்பதற்கு உரிய கருவியும் (உத்தி) ஏற்ற காலமும்  செயல் திறனும் (திறமிக்கவர்கள்) ஆகிய எல்லாவற்றையும் ஆராய்ந்து உரைக்க வல்லவர்களே அமைச்சர்கள்.
“ உணர உணரும் உணர்வு உடையாரைப்
புணரப் புணருமாம் இன்பம்… ” --- நாலடியார்.
நூலின்  பொருளை உணரத்தக்க வகையிலே உணர்ந்து கொள்ளும் அறிவுள்ளவரை நண்பராகச் சேர்த்துக் கொள்வதனால்தான் இன்பம் உண்டாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக