புதன், 23 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 630

திருக்குறள் – சிறப்புரை : 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு. ---- ௬௩0
ஒருவன், துன்பத்தையே இன்பமாக கொள்ளும் மனநிலையைப் பெற்றானாயின் அவன் பகைவர்களாலும் பாராட்டப்பெறும் சிறப்பை அடைவான்.
” இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்றறிவாய் மனமே.
“ நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க
படு பனை அன்ன பலர் நச்ச வாழ்வார்.” -----நாலடியார்.

 பலரும் விரும்பும்படி உதவி செய்து வாழ்கின்றவர்கள் ஊரின் நடுவே மேடைசூழ விளங்கும் பயன் தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக