ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 613

திருக்குறள் – சிறப்புரை : 613
 தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு. ---- ௬௧௩
பிறர்க்கு உதவிசெய்தலால் விளையும் பெருமிதம்  
முயற்சி என்னும் உயர்ந்த ஊக்கத்தின் தன்மையில் நிலைத்து நிற்கின்றது.
” எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறம் செய்தார் தலைப்படுவர் ….” – நாலடியார்
கொடுப்பது எவ்வளவு சிறிதாயினும் தம்மால் முடிந்த அளவு அறம் செய்பவர்கள் உயர்வடைவார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக