திங்கள், 21 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 628

திருக்குறள் – சிறப்புரை : 628
இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன். ---- ௬௨௮
 என்றும் இன்பத்தை விரும்பாதவன்;  வாழ்வில் துன்பம் நேர்வது இயல்புதான் என்பதை அறிந்தவன்;  துன்பம் வந்துற்றபோது துன்பம் அடைதல் இல்லை.
 துன்பமின்றி வாழ்வேது ; துன்பத்திற்கு அஞ்சினால் துறவு மேற்கொள்ள வேண்டியதுதான்.
“ பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே.” ---- மணிமேகலை.
இவ்வுலகில் பிறந்தார் அனைவரும் மூப்புற்றார், நோயுற்றார், இறந்தார் என்று சொல்லப்படுவது இயல்பான நிகழ்வே.


1 கருத்து: