செவ்வாய், 9 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1015


திருக்குறள் -சிறப்புரை :1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவர் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.  ----- ௧0௧௫
சான்றோர் தமக்குவரும் பழியையும் தம்மைச் சார்ந்தோர்க்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணம் கொள்வர். அத்தகையை பெரியோரை நாணுடைமை என்னும் நற்குணத்தின் உறைவிடமாகக் கருதி இவ்வுலகத்தார் போற்றுவர்.
“ பிறர் உறு விழுமம் பிறரும் நோப
 தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்.” ---அகநானூறு.
நல்லோர், பிறர் துன்பப்பட்டால் தமக்குத் தொடர்பு இல்லாதவரானாலும் அவர் துன்பத்தைத் துடைப்பர். தமக்குத் துன்பம் நேரின் அதைப் பெரிதாக எண்ணாமல் எளிதாகக் கொள்வர்.

1 கருத்து: