செவ்வாய், 16 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1022


திருக்குறள் -சிறப்புரை :1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி. ---- ௧0௨௨

செயலாற்றும் திறனும்  நிறைந்த அறிவும் உடைய ஒருவன் தொய்வின்றிச் செய்யும் பெருமைமிக்க செயல்களால் அவனுடைய குடிப்பெருமை நிலைத்து நீடித்திருக்கும்.

“ சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வாந்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது – வாந்தோயும்
மைதவழ் வெற்ப படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.” ---நாலடியார்.

வானம் அளாவிய மேகங்கள் தவழும் மலையை உடைய அரசனே..! அறிவிற் சிறந்த ஆண்மையும்  செயலாற்றல் மேன்மையும் நல்லொழுக்கமும் இவை மூன்றும் புகழால் உயர்ந்த நற்குடியில் பிறந்தார்க்கு அல்லாமல், பெருஞ் செல்வ வளம் வந்தடைந்தபோதும் நற்குடியில் பிறவாதவர்களுக்கு உண்டாகாவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக