செவ்வாய், 30 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1035


திருக்குறள் -சிறப்புரை :1035

இரவார் இரப்பாக்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.---- ௧0௩

உழவென்னும் உயர் தொழில் புரியும் உழவர்கள், உழைத்து உண்ணும் பெருமைக்குரியர்கள் ; பிறரிடம் சென்று இரந்துண்டு வாழமாட்டார்கள். மாறாகத் தம்மிடம் வந்து இரப்பவர்களுக்கு இல்லை என்னாது இருப்பதைக் கொடுத்து மகிழ்வார்கள்.

“கான் உறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்.” ---புறநானூறு.

வேட்டை நாயை உடைய வேட்டுவன், காட்டில் வாழும் வாழ்க்கையன் ; அவன் மான் தசையைக் கொண்ட கடகப் பெட்டியையும் ஆய்மகள் தயிர் கொண்டுவந்து தந்த பானையும் உடையவன் ; அவனுக்கு ஏரினால் உழுது வாழும் உழவர்தம் பெரிய வீட்டில் உள்ள மகளிர், குளத்திற்குக் கீழாக விளைந்த களத்திலிருந்து பெற்ற வெண்ணெல்லை முகந்து தருவர் ; அதனைப் பெற்றவனாய் மகிழ்ந்து தன் இருப்பிடத்திற்கு மீள்வான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக