வியாழன், 11 அக்டோபர், 2018


திருக்குறள் -சிறப்புரை :1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.---- ௧0௧௭
நாணுடைமையைப் பெருமையாகக் கருதி வாழ்பவர்கள், உயிர் வாழ்வதற்காக நாணத்தைக் கைவிடமாட்டார்கள் ;  நாணுடைமையைக் காக்க உயிரை இழக்கவும் தயங்க மாட்டார்கள்.
….. ….  ….. சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே.” –குறுந்தொகை
சான்றோர், தம்மை யார் புகழ்ந்தாலும் நாணுவர், அத்தகையோர் பழி ஏற்க நேர்ந்தால் எவ்வாறு தாங்குவர். தாங்க மாட்டார் என்பதாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக