புதன், 24 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1030


திருக்குறள் -சிறப்புரை :1030

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. ---- ௧0௩0

 குடிப்பெருமையைக் காக்கும் காலத்துப் அருகே இருந்து தாங்கும்
நல்ல ஆண்மகன் இல்லாத ,குடியாகிய மரம் துன்பமாகிய கோடரியால் வெட்டுண்டு இற்று வீழும்.

”முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியல் ஞாலம்
தாளின் தந்து தம் புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்தாக நின் ஆயுள் தானே.” ---புறநானூறு.

முழங்கும் கடல் முழுதும் வளைத்த பரந்தகன்ற உலகத்தைத் தம் முயற்சியால் கொண்டு, தம் புகழை உலகில் நிலைக்கச் செய்து, தாமே ஆண்ட வலியோர் மரபில் வந்தவனே..! ஒன்றைப் பத்தின் மடங்குகளாக அடுக்கிய, கோடியைக் கடை எண்ணாக இருத்திய பேரெண்ணிக்கையை நின் வாழ்நாள் கொண்ட பெருமையை அடையட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக