சனி, 20 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1026


திருக்குறள் -சிறப்புரை :1026

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

ஒருவன் தான் பிறந்த குடியின் பெருமையத் தனதாக்கி  ஆளும் ஆண்மைத் தன்மையே நல்லாண்மை என்பதாம்.

” நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்  
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகை துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
 வேளிருள் வேளே  விறல்போர் அண்ணல். “ –புறநானூறு.

நீதான், வடபுலத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றிச் செம்பாற் புனைந்து செய்தது போன்ற நீண்ட துவராபதி என்னும் நாட்டை ஆண்ட வெறுப்பற்ற கொடையினை உடைய நாற்பத்தொன்பது தலைமுறைகளைக் கொண்ட வேள்களுள் ஒருவன் ..! வெற்றி பொருந்திய போரையுடைய தலைவனே…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக