வெள்ளி, 12 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1018


திருக்குறள் -சிறப்புரை :1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.----- ௧0௧௮
பிறர் நாணத்தக்க பழிச்செயல்களைக் கண்டு தான் நாணம் கொள்ளானாயின்  அறமே நாணி அவனை விட்டு நீங்க, அவன் அறமற்றவன் என்னும் தன்மை உடையவனாவான்.
“ஈயா மன்னர் நாண
வீயாது பரந்த நின் வசையில் வான் புகழே.”—புறநானூறு.
இரவலர்க்கு ஈயாத மன்னர் நாண, பரிசிலர் பலரும் போற்றும் குற்றமற்ற நின் (பிட்டங்கொற்றன்.) புகழ் இவ்வுலகில் பரந்து நிலை பெறுவதாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக