புதன், 17 அக்டோபர், 2018


திருக்குறள் -சிறப்புரை :1023
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். ---- ௧0௨௩

பிறந்தகுடியின் பெருமையக் கட்டிக்காப்பேன் என உறுதிகொண்டு செயலாற்றும் ஒருவனுக்குத் துணையாகத் தெய்வம் கூட வரிந்து கட்டிக்கொண்டு முன்னேவந்து நிற்கும்.

“நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே
தம்மைப் பிழைத்தோர் பொறுக்கும் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் என
காண்தகு மொய்ம்ப காட்டினை…….” –புறநானூறு.

வேந்தே..! உன் மீது நான் பழி கூறிப் பிழை செய்ய ; நீ என்னைவிடப் பிழை செய்தவன் போல் மிகவும் நாணமடைந்தாய் ; இவ்வாறு தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்தருளும் தலைமை, இக்குலத்தில் பிறந்தவர்க்கு எளிமையாகக் காணப்படும் பண்பாகும் ; இப்பண்பினை யான் காணுமாறு வெளிப்படுத்தினை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக