ஞாயிறு, 28 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1033


 திருக்குறள் -சிறப்புரை :1033

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.---- ௧0௩௩

உழைப்பால் உழவுத் தொழில் செய்து தான் உண்டு பிறரும் உண்ண உணவளித்துவரும் உழவர்களே, இவ்வுலகில் உரிமையுடன் வாழத் தகுதியுள்ளோராவர்; மற்றையோர் எல்லாரும் அவரைத் தொழுது உணவுண்டு அவர் அடிதொழுது பின்செல்பவராவர்.

“ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
 வீற்றிருந்த வாழ்வும் விழும் –ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு. “ ----நல்வழி.

ஆற்றங் கரையில் இருக்கின்ற மரத்தின் வாழ்வும் ஓர் அரசின்கண் சிறப்பாக வீற்றிருந்தவருடைய  வாழ்க்கையும் நிலைத்திராமல் அழியும். உழுதொழில் அல்லாத மற்றத் தொழில்களுக்குப் குற்றங்குறைகள் உண்டு. ஆனால், உழுது பயிர்செய்து வாழ்பவருடைய உயர்ந்த வாழ்வுக்கு ஒப்பாக வேறோர் வாழ்க்கை இல்லை.

1 கருத்து:

  1. நல்வழி பாடல் மற்றும் விளக்கம் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு