சனி, 1 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1063


திருக்குறள் -சிறப்புரை :1063

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.----- ௧0௬௩

வறுமையால் விளையும் துன்பத்தை முயன்று நீக்க நினையாது, பிறரிடம் இரந்துண்டு வாழ்ந்துவிடலாம் என்று கருதும் மனவலிமையைவிட உலகில் வலிமை உடைய செயல் பிறிதொன்றில்லை.

“இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை.” ----முதுமொழிக் காஞ்சி.

பிச்சை எடுத்து உயிர் வாழ்தலைவிட இழிவான செயல் வேறு ஒன்றும் இல்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக