சனி, 29 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1090


திருக்குறள் -சிறப்புரை :1090

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.---- ௧0௯0

காய்ச்சி எடுக்கப்பட்ட மது, உண்டார்க்கு  மட்டுமே அல்லாமல்;  காமம் போல் கண்டார்மாட்டு மகிழ்ச்சியினைச் செய்தல் இல்லை.

“ காமம் கணைந்து எழ கண்ணின் களி எழ
 ஊர்மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை
கள்ளின் களி எழக் காத்தாங்கு…” ---பரிபாடல்.

 தம் கண்ணில் தோன்றும் காமக் களிப்பை ஊரார்க்கு அஞ்சி மறைப்பவருடைய நிலைமை, கள்ளுண்டு அதனால் உண்டாகிய களிப்பைப் புறத்தார்க்குப் புலப்படாது மறைப்பவருடைய நிலைமையை ஒக்கும். தாமே தம்மை அறியாது வெளிப்படுத்திக் கொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக