ஞாயிறு, 23 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1084


திருக்குறள் -சிறப்புரை :1084

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தான் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். ---- ௧0௮௪

பெண்ணிற்குரிய தன்மையுடைய இவளின் கண்கள், கண்டார் உயிரைப் பறிக்கும் தன்மை உடையனவாகிப் பெண் தகைமைக்கு மாறுபட்டிருந்தனவே.

“கண் ஆர்ந்த நலத்தாரைக் கதுமெனக் கண்டவர்க்கு
உள் நின்ற நோய்மிக உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று புனை இழாய் எனக் கூறித் தொழூஉம் தொழுதே
கண்ணும் நீராக நடுங்கினன்……” ---கலித்தொகை.

 உலகத்தில் கண் நிறைந்த அழகுடைய  மகளிரைக் கண்டவர்க்குக் கதுமென உள் நின்ற காம நோய் மிகுமானால், உயிர் போய்விடும் ; அத்துயரைச் செய்தல் அம்மகளிர்க்குப் பெண் தன்மை என்று கூறிக் கண்ணும் உருக நின்று நடுங்கினன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக