ஞாயிறு, 9 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1071


திருக்குறள் -சிறப்புரை :1071
108. கயமை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். ---- 0

உருவத்தால் மக்களை ஒப்பர் கயவர் ; கயவரும் மக்களும் ஒத்தாற் போன்ற ஒப்புமையை வேறு இரண்டு இனத்தில் யாம் கண்டதில்லை.

“ நிறைப் பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்து
மறைப் பெருங் கல் அன்னார் உடைத்து.” ---நாலடியார்.

நிறைவான பெருஞ் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் மனத்தில் கொஞ்சமும் இரக்கமின்றிப் பாறையாகிய பெரிய கல்லைப் போன்றவர்களை உடையதாயிருக்கின்றது இவ்வுலகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக