வியாழன், 13 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1074


திருக்குறள் -சிறப்புரை :1074

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். -----0

கீழ்மகன் ஒருவன் தன்னினும் கீழ்த்தரமாய்,  மனம்போனபோக்கில் ஒழுகுவாரைக் கண்டால், தான் அவரைவிட மேலானவன் என்று கருதி இறுமாப்புக்கொள்வான்.

“ மைதீர் பசும்பொன் மேல் மாண்ட மணி அழுத்திச்
செய்தது எனினும் செருப்புத்தன் காற்கே ஆம்
எய்திய செல்வத்தர் ஆயினும் கீழ்களைச்
செய்தொழிலால் காணப்படும்.” -----நாலடியார்.

குற்றமற்ற நல்ல பொன்னின் மேலே மாட்சிமையுடைய இரத்தினங்களை இழைத்து செய்யப்பட்டதானாலும் செருப்பு, தன் காலில் அணிவதற்கே பயன்படும் அதுபோல, கீழ்மக்கள் எவ்வளவு செல்வம் பெற்றவராயினும் அவர்கள் கீழ்மக்களே என்பதை அவர்கள் செய்யும் செயல்களால் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக