ஞாயிறு, 30 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1091


திருக்குறள் -சிறப்புரை :1091

110. குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. ----- ௧0௯௧

இவளுடைய மையுண்ட கண்களில் இரண்டு நோக்குகள் உள்ளன ;  அவற்றுள் ஒன்று நோய் செய்யவல்லது ; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாக அமைவது. (நோக்கு – காதல் பார்வை)

“பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்
மற்று இந்நோய் தீரும் மருந்து அருளாய்…” –கலித்தொகை.

பெரிய அமர்த்த மையுண்ட கண்ணினை உடைய நின் தோழி, உறுத்தின பொறுத்தற்கரிய கவர்ச்சியைச் செய்யும் வருத்தம் கதுமென உயிரை வாங்கும் ; ஒண்டொடீ..! அஃது உயிரை வாங்காதபடி இந்நோய் தீர்தற்கான மருந்தை அருளாய்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக