திங்கள், 31 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1092


திருக்குறள் -சிறப்புரை :1092

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது. --- ௧0௯

இவள் கண்கள் என்னை நேரே நோக்காது கடைக்கண்ணால் பார்க்கும் பார்வை, காமவிருப்பின் சரிபாதியன்று ; அதைவிடமேலானதாக, இசைவுக்கு அறிகுறியாகும்.

“பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவென் பாலென
விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித்
திதலை அல்குல் எம்காதலி
புதவற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.”அகநானூறு.

பொன்னாலாகிய தாலியினை உடைய என் மகனை நினைந்து, இவண் வருதியாயின் தருகுவன் பால் என, ஒருக்கணித்து நோக்கும் அமரிய கண்ணினளாய், விரலால் அழைத்தலைப் பயிலச் செய்து, தன் புதல்வனைத் தன் கருத்துணராமை மறைக்கும் தேமல் படர்ந்த அல்குலினை உடைய எம் காதலியாய பூங்கொடி போல்வாள் நிலையினைக் காண்குவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக