வெள்ளி, 14 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1075


திருக்குறள் -சிறப்புரை :1075

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது.-----0௭௫

அச்சப்பட்டுக்கிடப்பதே கீழ்மக்களின் இயல்பாகும். அஞ்சி ஒடுங்குவது ஒழித்து உழைத்துப் பொருளை ஈட்டவேண்டும் என்று ஆசைப்பட்டாலே  ஒரு சிறிதாவது அச்சம் ஒழியும்.                         

”செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பு  அறுக்கில்லா தேரை – வழும்பில்சீர்
நூள்கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது. ----நாலடியார்.

தவளைகள்   செழிப்பான குளத்தில் எந்நாளும் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தம்மேலுள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ள மாட்டா. குற்றமில்லாத சிறப்புடைய பல நூல்களைக் கற்ற போதும் நுணுகி நோக்கும் அறிவு இல்லாதார், நூற்கருத்தை அறிந்து கொள்ளும்  தன்மையுடையர் அல்லர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக