வெள்ளி, 28 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1089


திருக்குறள் -சிறப்புரை :1089

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து. --- ௧0௮௯

பெண்மானை ஒத்த மடப்பத்தையுடைய பார்வையும் உடன்பிறந்த நாணத்தையும் அணிகலன்களாகக்கொண்ட  இவளுக்குச் செயற்கை அழகினைக் கூட்டுதற்குப் பிற அணிகலன்களைப் பூட்டுவது என்னபயன் உடைத்து..?

“கொலை உண்கண் கூர் எயிற்று கொய் தளிர் மேனி
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி….” ----கலித்தொகை.

கொலைத் தொழிலை உடைய மையுண்ட கண்ணையும் கூரிய எயிற்றினையும் (பல்). தளிர்போன்ற மேனியையும் கண்டார் வருத்தும் அழகினையும் உடைய மாயோளே..! நின்னைக்காட்டிலும் சிறந்தார் மண்ணுலகத்து இல்லை என்பதை நீயே தெளிவாய்..! என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக