ஞாயிறு, 12 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1253


திருக்குறள் -சிறப்புரை :1253

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும். --- ௨ ௫ ௩

காமவேட்கையை என்னுள் மறைத்து வைத்துக்கொள்ள விரும்பினேன், ஆயினும் முன்னறிவிப்பு ஏதுமின்றித் தும்மலைப்போல் அடக்கவியலாது வெளிப்பட்டுவிடுகின்றது.

குக்கூ என்றது கோழி அதனெதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.----குறுந்தொகை.

கோழி, குக்கூ என்று கூவிற்று. எனது தோளை மண்ந்த காதலரைப் பிரியச் செய்யும் வாளைப்போல, வைகறைப் பொழுது வந்தது அதனால், என் தூய நெஞ்சம் துட்கென அச்சம் கொள்வதாயிற்று..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக