செவ்வாய், 28 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1286


திருக்குறள் -சிறப்புரை :1286

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.------ ௨ ௮ ௬

காதலரைக் காணுகின்ற போது அவருடைய தவறுகளைக் காணாதவளாகின்றேன் ;  அவரைக் காணாதபோது அவருடைய தவறல்லாத பிற நல்ல குணங்களைக் காணாதவளாகின்றேன்.

இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்
 நனிச் சிவந்த வடுக்காட்டி நாண் இன்றிவரின்எல்லா
துனிப்பென் யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
தனித்தே தாழும் இத்தனி இல் நெஞ்சு.” ---கலித்தொகை.

தோழி…! இனிதாகக் கூடிய அழகினையுடைய பரத்தையரின் பற்கள் பதிந்த வடுக்களைக் காட்டி, நாணமின்றியே வருவான் ; வந்தால் துனித்திருப்பேன் என்று யான் கூறுவேன் ; ஆனால், அந்நிலையிலே அவனைக் கண்டால், மனத்தைத் தனக்கு உரித்தாக்கல் இல்லாத நெஞ்சு தவறுகளோடு கூடிய அந்நிலைதன்னிலே என்னை நீக்கி, அவனிடத்தே தாழ்ந்து விடுகின்றது, என் செய்வேன்….?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக