திங்கள், 27 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1284


திருக்குறள் -சிறப்புரை :1284

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. ----- ௨ ௮ ௪

தோழி…! காதலரைக் காணாது தவித்தபோது  அவரோடு ஊடல் கொள்ள நினைத்தேன், ஆனால் அவரைக் கண்டபோது  ஊடலைத்துறந்து, கூடிமகிழ விரைந்தது என் நெஞ்சம்.

கடைஇய நின் மார்பு தோயலம் என்னும்
இடையும் நிறையும் எளிதோநிற்காணின்
கடவுபு கைத்தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு
உடன்வாழ் பகை உடையார்க்கு.” ----கலித்தொகை.

உன்னைக் கண்டால் என்னை உன்னிடத்தே செலுத்தித் தானும் உன்னிடத்தே வந்து தங்கிவிடும் நெஞ்சு என்று சொல்லப்படும் தம்மோடு உடன் வாழ் உட்பகையை உடையவள் நான் ; முன்னர் என்னை நின்மேல் வீழ்வித்த நின் மார்பை தழுவ மாட்டேன் என்று கூறும் நிறை என்னும் குணத்தையும் பெறுதல் எளிதன்றோ? அஃது அரிதன்றோ..என ஊடல் தீர்ந்தாள் கூறினாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக