சனி, 16 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 1

7- நெடுநல்வாடை
நெடுநல்வாடை :  பத்துப்பாட்டு நூல்களில் ஏழாவதாக இடம் பெற்றுள்ள நெடுநல்வாடை 188 அடிகளைக்கொண்டு ஆசிரியப்பாவால் அமைந்ததாகும். இப்பாடலை இயற்றியவர், மதுரை கணக்காயனார் மகனார்
நக்கீரர் ஆவார்.
தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு, ஒரு பொழுது ஓர் ஊழிக்காலம் போல நீண்டு தோன்றுவதால் வாடை , தலைவியைப் பொறுத்தவரை நெடிய வாடையாய் உள்ளது.

நெடுநல்வாடை அரிய செய்தி  : 1
புதுமழை பொழிய
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென.
நக்கீரர், நெடுநல் .  7: 1 – 2
பருவம் பொய்க்காமல் உரிய காலத்தில் மழையைத்தரும் மேகங்கள், தவழ்ந்து கிடந்த மலைப்பகுதியை வலமாகச் சூழ்ந்து மேலெழுந்தன, உலகமெல்லாம் குளிரும்படி, கார்காலத்தில் புதுமழையைத் தந்தன.
 நல்லாட்சி நடைபெறும் நாட்டில், மேகங்கள் உரிய பருவத்தில்  பொய்க்காமல் மழையைத்தரும் என்பது நம்பிக்கையாகும்.
 ( வையகம் – உலகம் ; பனித்தல் – நடுங்குதல் ; புதுப்பெயல் – கார்காலத்து முதல் மழை.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக